· உமா மகேஸ்வரி 1971 ஆம் ஆண்டு போடி நாயக்கனூரில் பிறந்தவர். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தனது பதின் வயதிலேயே கவிதை எழுதத் தொடங்கியவர். 1985 இல் கவிதை எழுதத் தொடங்கி , சிறுகதை , நாவல் என இலக்கிய உலகில் தமது தளத்தை உருவாக்கிக்கொண்டவர். நட்சத்திரங்களின் நடுவே( 1990), வெறும்பொழுது( 2002), கற்பாவை( 2004), என மூன்று கவிதைத் தொகுதிகளும் மரப்பாச்சி( 2002), தொலைகடல் ( 2004), அரளிவனம்( 2008) என்று மூன்று சிறுகதைத் தொகுதிகளும் யாரும் யாருடனும் இல்லை( 2003) என்ற நாவலும் இவருடைய ஆக்கங்களாகும். கதா விருது , திருப்பூர் தமிழ்ச் சங்க விருது , இந்தியா டுடேயின் சிகரம் விருது , ஏலாதி , கணையாழி , இலக்கியச் சிந்தனை , கவிஞர் சிற்பி இலக்கியப் பரிசு எனப் பல விருதுகளையும் பரிசு களையும் தமது ஆக்கங்களுக்காகப் பெற்றிருக்கிறார். ஆண்டிப்பட்டி யில் வசித்து வருகிறார். · மரப்பாச்சி தொடங்கி ரணகள்ளி வரை 14 கதைகள் மரப்பாச்சி தொகுதியிலும் மூடாதஜன்னல் முதல் தொலைகடல் வரை 14 கதைகள் தொலைகடல் தொகுதியிலும் ...
சந்திரா தங்கராஜ் சென்னைக்கு வந்து 27 ஆண்டுகள் ஆகின்றன. பத்திரிக்கையாளர் பின் திரைப்படத்துறை என்றெல்லாம் இத்தனை ஆண்டுகள் பயணித்தாலும், பிறந்த ஊரான தேனி மாவட்டத்தின் கூடலூரை இன்னும் சுமந்து கொண்டிருப்பது, இந்தக் கதைகளை வாசிக்கையில் தெரிகிறது. சோளம் மற்றும் பூனைகள் இல்லாத வீடு என்ற தொகுதிகளில் வெளிவந்திருக்கும் இந்த கதை, கி ராமகிருஷ்ணன் அவர்களின் தமிழில் சிறந்த 100 சிறுகதைகள் என்ற தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது.பூனைகள் இல்லாத வீடு, ஒரு குடும்பத்தில் பிள்ளைகள் வளர்ந்து ஒவ்வொருவராக வெளியேறி முற்றத்தை வெற்றிடமாக்கி போவதை சொல்வதுடன் முடிவதில்லை. கதைக்குள் கதையாக பெரியம்மா குடும்பத்தின் கதையும் இருக்கிறது. ஒரு சிறுவனின் பார்வையில் நகரும் கதையில் காலம் அவனது வளர்ச்சியை போலவே வேகமாக கடந்து செல்கிறது. ஒரு கூரையின் கீழ் அடித்துக்கொண்டும், கொஞ்சிக் கொண்டும் வாழ்ந்தவர்கள், இனி அவரவர் வாழ்க்கையை வாழப் போவதை எந்த ஆரவாரமும் இல்லாமல் சொல்லி பிரதான கதை நகர்ந்து முடிகிறது. ஆனால் கிளை கதையில் முக்கியமான ஒரு விஷயத்தை மறைத்து வைத்திருக்கிறார் சந்திரா. பூனைகள் என்பது குறியீடு இந்தத் தொகுப்புகளை மூன்று வ...
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1881369340142959" crossorigin="anonymous"></script> அகிலன் (Akilan) என்று அறியப்படும் பி. வி. அகிலாண்டம் (சூன் 27, 1922 - சனவரி 31, 1988) தமிழக எழுத்தாளர் ஆவார். எதார்த்தம் மற்றும் ஆக்கப்பூர்வமான எழுத்து நடைக்குப் பெயர் பெற்றவராக அகிலன் அறியப்படுகிறார். அகிலன் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். சிறப்புப் பெற்ற புதின ஆசிரியராக, சிறுகதையாளராக, நாடகாசிரியராக, சிறுவர் நூலாசிரியாராக, மொழிப்பெயர்ப்பாளராக, கட்டுரையாளராக இவருக்குப் பல முகங்கள் உண்டு. அகிலன் எழுதிய சித்திரப்பாவை என்ற வரலாற்று நாவல் 1975-ஆம் ஆண்டிற்கான மதிப்பு மிக்க ஞான பீட விருதை வென்றது[1]. இந்நாவல் அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. இவர் எழுதிய வேங்கையின் மைந்தன் என்ற வரலாற்று நாவலுக்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது 1963-இல் கிடைத்தது. எங்கே போகிறோம் என்ற தனித்துவமான சமூக அரசியல் நாவல் 1975-ஆம் ஆண்டில் இவருக்கு ராசா சர் அண்ணாமலை விருதைப...
கருத்துகள்
கருத்துரையிடுக