· உமா மகேஸ்வரி 1971 ஆம் ஆண்டு போடி நாயக்கனூரில் பிறந்தவர். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தனது பதின் வயதிலேயே கவிதை எழுதத் தொடங்கியவர். 1985 இல் கவிதை எழுதத் தொடங்கி , சிறுகதை , நாவல் என இலக்கிய உலகில் தமது தளத்தை உருவாக்கிக்கொண்டவர். நட்சத்திரங்களின் நடுவே( 1990), வெறும்பொழுது( 2002), கற்பாவை( 2004), என மூன்று கவிதைத் தொகுதிகளும் மரப்பாச்சி( 2002), தொலைகடல் ( 2004), அரளிவனம்( 2008) என்று மூன்று சிறுகதைத் தொகுதிகளும் யாரும் யாருடனும் இல்லை( 2003) என்ற நாவலும் இவருடைய ஆக்கங்களாகும். கதா விருது , திருப்பூர் தமிழ்ச் சங்க விருது , இந்தியா டுடேயின் சிகரம் விருது , ஏலாதி , கணையாழி , இலக்கியச் சிந்தனை , கவிஞர் சிற்பி இலக்கியப் பரிசு எனப் பல விருதுகளையும் பரிசு களையும் தமது ஆக்கங்களுக்காகப் பெற்றிருக்கிறார். ஆண்டிப்பட்டி யில் வசித்து வருகிறார். · மரப்பாச்சி தொடங்கி ரணகள்ளி வரை 14 கதைகள் மரப்பாச்சி தொகுதியிலும் மூடாதஜன்னல் முதல் தொலைகடல் வரை 14 கதைகள் தொலைகடல் தொகுதியிலும் ...
அருமை வாழ்த்துகள்
பதிலளிநீக்கு