"வெளிய - எழுதியது அ.வெண்ணிலா
அ.வெண்ணிலா தமிழக எழுத்தாளரும் கவிஞரும் ஆவார். கவிஞர், சிறுகதை ஆசிரியர், கட்டுரையாளர், நாவலாசிரியர்,ஆசிரியர், சிறு பத்திரிகை ஆசிரியர், என பன்முக ஈடுபாடுகளுடன் தமிழ் உலகில் இயங்கி வருகிறார் பெண்ணியம் சார்ந்த கருத்துக்களை முன்னெடுத்து இலக்கியம் படைத்து வருவது வெண்ணிலாவின் தனித்துவம் ஆகும். அன்றாட வாழ்வின் இன்னல்களை புனைவுகள் ஏதுமின்றி படைப்பாக்குவது இவரது ஆற்றலாகும் இவர் எழுதிய படைப்புகள் ஆங்கிலம் மலையாளம் இந்தி என பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நூல்கள் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களில் பாடமாகவும் இடம்பெற்றுள்ளன. 2009- 2010ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் சமச்சீர் கல்வி பாடத் திட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி புதிய பாட புத்தக உருவாக்கத்தில் பங்களிப்பு வழங்கியுள்ளார். இவர் எழுதிய இந்த "வெளிய" என்ற கதை விளிம்பு நிலை பெண்களின், இயற்கை உபாதைகளால் ஏற்படும் சங்கடங்களை விவரிக்கிறது. இதை படிப்பதற்கு சிலர் அருவருப்பு அடையலாம் ஆனால் அவை இன்றும் நடக்கும் அவலங்கள். இந்த யதார்த்த உண்மையை நாகரீக உலகம் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் முதன்முறையாக பூப்பெய...