உலக இலக்கியங்கள் பலவற்றை நான் அமேசான் KDP யில் சுயபதிப்பு செய்து வருகிறேன் .இதுவரை 300 க்கு மேற்பட்ட புத்தகங்கள் கிண்டில் மற்றும் பேப்பர்பேக் வடிவில் வெளியிட்டிருக்கிறேன். அவற்றில் அதிகம் விற்ற கிண்டில் பதிப்பு இந்த பமிலாதான். 600 பக்கங்களுக்கு மேல் உள்ள இந்த கதையை சுருக்கி உங்களுக்கு தமிழில் சில நிமிட கதையாக சொல்கிறேன் .
பூனைகள் இல்லாத வீடு -சந்திரா தங்கராஜ் .
சந்திரா தங்கராஜ் சென்னைக்கு வந்து 27 ஆண்டுகள் ஆகின்றன. பத்திரிக்கையாளர் பின் திரைப்படத்துறை என்றெல்லாம் இத்தனை ஆண்டுகள் பயணித்தாலும், பிறந்த ஊரான தேனி மாவட்டத்தின் கூடலூரை இன்னும் சுமந்து கொண்டிருப்பது, இந்தக் கதைகளை வாசிக்கையில் தெரிகிறது. சோளம் மற்றும் பூனைகள் இல்லாத வீடு என்ற தொகுதிகளில் வெளிவந்திருக்கும் இந்த கதை, கி ராமகிருஷ்ணன் அவர்களின் தமிழில் சிறந்த 100 சிறுகதைகள் என்ற தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது.பூனைகள் இல்லாத வீடு, ஒரு குடும்பத்தில் பிள்ளைகள் வளர்ந்து ஒவ்வொருவராக வெளியேறி முற்றத்தை வெற்றிடமாக்கி போவதை சொல்வதுடன் முடிவதில்லை. கதைக்குள் கதையாக பெரியம்மா குடும்பத்தின் கதையும் இருக்கிறது. ஒரு சிறுவனின் பார்வையில் நகரும் கதையில் காலம் அவனது வளர்ச்சியை போலவே வேகமாக கடந்து செல்கிறது. ஒரு கூரையின் கீழ் அடித்துக்கொண்டும், கொஞ்சிக் கொண்டும் வாழ்ந்தவர்கள், இனி அவரவர் வாழ்க்கையை வாழப் போவதை எந்த ஆரவாரமும் இல்லாமல் சொல்லி பிரதான கதை நகர்ந்து முடிகிறது. ஆனால் கிளை கதையில் முக்கியமான ஒரு விஷயத்தை மறைத்து வைத்திருக்கிறார் சந்திரா. பூனைகள் என்பது குறியீடு இந்தத் தொகுப்புகளை மூன்று வ...
கருத்துகள்
கருத்துரையிடுக