உலக இலக்கியங்கள் பலவற்றை நான் அமேசான் KDP யில் சுயபதிப்பு செய்து வருகிறேன் .இதுவரை 300 க்கு மேற்பட்ட புத்தகங்கள் கிண்டில் மற்றும் பேப்பர்பேக் வடிவில் வெளியிட்டிருக்கிறேன். அவற்றில் அதிகம் விற்ற கிண்டில் பதிப்பு இந்த பமிலாதான். 600 பக்கங்களுக்கு மேல் உள்ள இந்த கதையை சுருக்கி உங்களுக்கு தமிழில் சில நிமிட கதையாக சொல்கிறேன் .
"ஒரு மனுசி" By பிரபஞ்சன். கதை சொல்கிறேன்-24
"ஒரு மனுசி" By பிரபஞ்சன். கதை சொல்கிறேன்-24 பிரபஞ்சன் பிறந்த ஊர் புதுச்சேரி. இவரது இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். இவரது தந்தை ஒரு கள்ளுக்கடை வைத்திருந்தார்.
புதுச்சேரியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கரந்தை கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றார். தஞ்சாவூரில் ஆசிரியராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். குமுதம், ஆனந்த விகடன் மற்றும் குங்குமம் ஆகிய வார இதழ்களில் பணிபுரிந்தார். 1961ல், இவரது முதல் சிறுகதை என்ன உலகமடா பரணி என்ற இதழில் வெளியானது. இவர் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். இதுவரை 46 புத்தகங்களுக்கும் கூடுதலாக எழுதியுள்ளார்.
1995ல் இவரது வரலாற்றுப் புதினம் வானம் வசப்படும் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது. இப்பபுதினம் ஆனந்தரங்கம் பிள்ளையின் காலத்தைக் களமாகக் கொண்டுள்ளது. இவரது படைப்புகள் இந்தி, தெலுங்கு, கன்னடம், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் சுவீடிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது நாடகமான முட்டை தில்லி பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலுள்ளது. இவரது சிறுகதைத் தொகுப்பான நேற்று மனிதர்கள் பல கல்லூரிகளில் பாடப்புத்தகமாக உள்ளது.
சாமானிய...
கருத்துகள்
கருத்துரையிடுக